News April 28, 2025
தி.மலையில் 500 பேருக்கு IT வேலை ரெடி

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடி துறைகளை மேம்படுத்த மினி டைடல் பார்க் அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.34 கோடி செலவில் டைடல் பார்க் கட்டப்படும் என்றும், இது 4 தளங்களைக் கொண்டிருக்கும் எனவும், ஓராண்டில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தி.மலை இளைஞர்கள் 500 பேர் ஐடி துறையில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News August 13, 2025
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தினை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithuraitn.gov. in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
News August 13, 2025
தி.மலை மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

நம்ம தி.மலை மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா
நகராட்சி- (3)
மாநகராட்சி- (1)
பேரூராட்சிகள்- (10)
வருவாய் கோட்டம்- (3)
தாலுகா- (12)
வருவாய் வட்டங்கள் – (12)
வருவாய் கிராமங்கள்- (1067)
ஊராட்சி ஒன்றியம்- (18)
கிராம பஞ்சாயத்து- (860)
MP தொகுதி- (2)
MLA தொகுதி- (8)
மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
மக்கள் தொகை-24,64,875
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News August 13, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.