News April 28, 2025

சிந்து நதி விவகாரம்.. அச்சத்தில் பாக். விவசாயிகள்

image

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தினால், அது பாகிஸ்தானை பாலைவனமாக்கும் என அந்நாட்டு விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாயம் இல்லாமல் மக்கள் பட்டினியில் உயிரிழப்பர் எனவும், மொத்த நாட்டு மக்களுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என இந்தியா கூறிவருகிறது.

Similar News

News March 20, 2026

அடுத்த ரேஸில் களமிறங்கும் அஜித்!

image

க்ரெவெண்டிக் 24H சீரிஸ் ஐரோப்பிய தொடரில் இன்று அஜித் பங்கேற்க உள்ளார். Ajith RedAnt Racing என்ற பெயரில் களமிறங்கும் அவரது அணியில், அவருடன் இணைந்து கோபி டி பிரூக்கர், அய்ர்டன், யானிக் ஆகியோர் ரேஸில் கலக்க உள்ளனர். இந்த ரேஸில் அஜித் Mercedes-AMG GT3 EVO ரக காரைப் பயன்படுத்த உள்ளாராம். துபாய் தொடரில் கோப்பையை வெல்ல தவறியதால், இதில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் இருக்கிறாராம்.

News March 20, 2026

ஈரான் போருக்காக மேலும் ₹18 லட்சம் கோடியை இறைக்கும் US

image

ஈரானுடனான போரைத் தொடர்வதற்காக, பென்டகன் அமெரிக்க காங்கிரஸிடம் 200 பில்லியன் டாலர் (₹18 லட்சம் கோடி) கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானியப் பொருளாதாரத்தின் (356 பில்லியன் டாலர்) பாதிக்கும் மேலாகும். போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டது. போருக்காக அமெரிக்கா அதிகப்படியாக செலவிடுவதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

News March 20, 2026

கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

image

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

error: Content is protected !!