News April 28, 2025
வெளியேறாத பாகிஸ்தான் நாட்டவருக்கு என்ன நடக்கும்?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தானியர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேற அரசாங்கம் நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிந்துவிட்டது. நாட்டை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் Immigration and Foreigners Act 2025, சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News November 3, 2025
‘இரவு 12 மணி’: மம்தாவை வறுத்தெடுத்த பாஜக

மே.வங்க வன்கொடுமை சம்பவத்தின் போது, இரவு 8 மணிக்கு மேல் மாணவிகளை வெளியே அனுமதிக்க கூடாது என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த மம்தா பானர்ஜியை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. “யாரும் இரவில் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தீர்கள். ஆனால், நம் வீராங்கனைகள் இரவு 12 மணி வரை விளையாடினார்களே!” என்று X-ல் பதிவிட்டுள்ளது.
News November 3, 2025
புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. மேலும், நவ.9 வரை தமிழகத்தில் மழை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் கவனமாக இருங்க!
News November 3, 2025
ராக்கெட் போல சீறும் பறவைகள் தெரியுமா?

வானத்தில் பறக்கும் பறவைகளின் வேகம் நம்மை ஆச்சரியப்படுத்தும். வானத்தில் சுதந்திரமாக பறக்கும் அவற்றின் திறன் நம்மை வியப்படைய செய்கிறது. இவ்வளவு வேகமா என்று வாயைப் பிளக்க வைக்கும் பறவைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் எந்த பறவையுடன் பறக்க விரும்புகிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.


