News April 28, 2025

IPL-ல் புது வரலாற்றை எழுதிய கோலி!

image

IPL-ன் 11 சீசன்களில் 400-க்கும் அதிகமான ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கிங் கோலி படைத்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த 10 போட்டிகளில், 6 அரை சதங்கள் உள்பட 63.29 ஆவரேஜுடன் அவர் 443 ரன்களை எடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவிடம் இருந்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். அதேபோல், ஒரு சீசனில் அதிக ரன்கள் (973) எடுத்த வீரராகவும் அவர் உள்ளார்.

Similar News

News April 29, 2025

QR code-ஐ கண்டுபிடித்தவரை பற்றி தெரியுமா..?

image

டிஜிட்டல் உலகின் புரட்சிக்கு காரணமான QR code-ஐ கண்டுபிடித்தவர் ஜப்பானின் மாசாஹிரோ ஹரா என்பவர். கார் கம்பெனியில் வேலை பார்த்த இவர், கார் உதிரிகள் குறித்த தகவல்களை கூடுதலாக, சேமிக்க வடிவமைத்ததே QR code. ஜப்பானின் ‘Go’ என்ற போர்ட் கேமின் டிசைன்தான் இவருக்கு inspiration. 1994-ல் QR code-ஐ வடிவமைத்த ஹரா, உலக முழுக்க தற்போது இது பயன்படுத்தப்பட்டாலும், இதற்காக காப்புரிமையோ, பணமோ கேட்டதில்லையாம்.

News April 29, 2025

இணையத்தில் டிரெண்டாகும் #ByeByeStalin

image

2026-ல் திராவிட மாடல் அரசின் ‘2.0’ லோடிங் என சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் பேசியிருந்தார். இந்நிலையில், 2026-ல் தமிழக மக்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பதோடு #ByeByeStalin என அதிமுக ஐடி விங் பதிவிட்டுள்ளது. இதனால், X பக்கத்தில் #ByeByeStalin ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதில், ‘2026-ல் ஒரே Version தான் அது TN AIADMK Version’ என அக்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.

News April 29, 2025

வைபவ் சூர்யவன்ஷிக்கு பம்பர் பரிசு.. பிஹார் CM அறிவிப்பு

image

ஓவர் நைட்டில் பாப்புலராகி இருக்கும் RR வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுகளுடன் பணமழையும் கொட்டத் தொடங்கியுள்ளது. IPL-ல் அதிவேக சதமடித்த இந்திய வீரர் என சாதனை படைத்த அவரை பிஹார் CM நிதிஷ் குமார் வாழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக வருங்காலத்தில் புதிய சாதனைகளை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நிதிஷ், வைபவுக்கு ₹10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!