News April 28, 2025

அரியலூர்: மது விற்ற பெண் கைது

image

விக்கிரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக புகார் வந்ததன்பேரில், விக்கிரமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த மலர் (55) என்பவர் தனது வீட்டின் பின்புறம் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Similar News

News August 24, 2025

அரியலூர் மாவட்ட போலீஸ் கடும் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி அமைந்துள்ள பகுதியை சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்குள் பான் மசாலா குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அரியலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News August 23, 2025

அரியலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், (ஆக.23) அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர்கள் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News August 23, 2025

அரியலூர்: அடிப்படை பிரச்னைக்கு உடனடி தீர்வு

image

அரியலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்.இந்த தகவலை Share பண்ணுங்க.!

error: Content is protected !!