News April 28, 2025
கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கெங்காபுரத்தை சேர்ந்தவர் மதி (17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் ராமச்சந்திரபுரத்திலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்ற மதி நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள் மதியை சடலமாக மீட்டனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
திருப்பத்தூர்: 10th, ITI போதும் அரசு துறையில் வேலை!

திருப்பத்தூர் மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <
News September 18, 2025
திருப்பத்தூரில் தொழில் பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு!

திருப்பத்தூரில் தொழில் முனைவோர் மேம்பாடு நிறுவனத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ளார். இதற்கான விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தின் வாயிலாகவும் மற்றும் மாவட்ட திட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
News September 18, 2025
திருப்பத்தூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பத்தூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும்போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!