News April 28, 2025
இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!

இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிஷா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 6, 2025
‘AK65’ அஜித்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?

AK65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லியதாகவும், இதையடுத்து அவர் கதை விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனுடனான AK64 படத்தை விரைவில் முடித்துவிட்டு, லோகியுடன் இணைந்து அஜித் பணியாற்ற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த காம்போவுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
News November 6, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 511 ▶குறள்: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். ▶பொருள்: ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.
News November 6, 2025
கோவை பாலியல் கொடூரம்.. மதுவிலக்கு கோரும் திருமா

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த மதுவிலக்கை TN அரசு அமல்படுத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். கோவை மாணவி கூட்டு பாலியல் கொடூரமானது, பெண்கள் பாதுகாப்பில் அரசு கூடுதல் அக்கறை எடுப்பது அவசியம் என்பதை உணர்த்துவதாக X-ல் அவர் தெரிவித்துள்ளார். அதிக மது அருந்துவதில் இந்தியாவிலேயே TN 2-வது மாநிலமாக இருப்பதாகவும், 12% குடிநோயாளிகளாக உள்ளது கவலையை தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


