News April 28, 2025
16 திங்கட்கிழமை சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால்..

16 திங்கட்கிழமைகளில் சிவனை வழிப்படுவது, மனக்கஷ்டங்கள் நீங்க செய்யும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை மேற்கொள்ள, ஒவ்வொரு திங்கள் காலையிலும் நீராடி, சிவன் பார்வதிக்கு பூஜை செய்யவேண்டும். அன்று ஒரு நாள் உணவிற்கு பதிலாக பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பூஜைக்கு வில்வ இலைகள், செவ்வரளி மலர்கள், சங்கு பூக்களையும், நைவேத்தியமாக பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபடலாம்.
Similar News
News April 28, 2025
நான் ராஜினாமா செய்ய தயார்: செல்வப்பெருந்தகை சவால்

நீட் தேர்வை பாஜக தான் சட்டமாக கொண்டுவந்தது; காங்கிரஸ் இல்லை என்று காங்., கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்த சட்டம் காங்., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்று நிரூபித்தால், நான் ராஜினாமா செய்கிறேன் என்று சவால் விடுத்த அவர், பாஜக ஆட்சியில் என்று நிரூபித்தால் நீங்கள்( பாஜக எம்.எல்.ஏ.க்கள்) ராஜினாமா செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
News April 28, 2025
குரு பெயர்ச்சி: அதிர்ஷ்ட யோகம் பெறும் 5 ராசிகள்

வரும் மே 14-ல் குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வதால் நன்மைகள் பெறும் ராசிகள்: *மேஷம்: செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். *கன்னி: தொழிலில் வெற்றி. வருமானம் உயரும். குடும்ப வாழ்க்கை சிறக்கும். *துலாம்: கல்வி மேம்படும். தொழில், வேலையில் முன்னேற்றம். *கும்பம்: குழந்தை மூலம் மகிழ்ச்சி, காதல் உறவு மேம்படும். வருமானம் உயரும். *மீனம்: தொழிலில் முன்னேற்றம், நிதிநிலை மேம்படும்.
News April 28, 2025
எந்தக் கட்சியில் இணைய போகிறார் காளியம்மாள்?

நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் புதிய கட்சியில் இணைவது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், திமுக, அதிமுக, தவெக எனப் பல கட்சிகளிலிருந்து அழைப்புகள் வந்தது உண்மை தான். ஆனால், எந்தக் கட்சிக்கு செல்வது என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் கட்சியில் இணைவேன். அந்த முடிவை மே மாத இறுதிக்குள் நிச்சயம் அறிவிப்பேன் எனக் கூறியுள்ளார்.