News April 28, 2025
3 ஆண்டுகள் சிறை.. பாக். குடிமக்களுக்கு எச்சரிக்கை!

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவதற்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த 4-ம் தேதி அமலான குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி, 3 ஆண்டுகள் சிறை அல்லது ₹3 லட்சம் அபராதம் அல்லது இது இரண்டுமே விதிக்கப்படும் என கூறியுள்ளது. மெடிக்கல் விசாவில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு நாளையே கடைசி நாளாகும்.
Similar News
News April 28, 2025
கோர விபத்து.. PM மோடி இரங்கல்

ம.பி. சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாந்த்சௌர் பகுதியில் பைக் மீது மோதி வேன் கிணற்றில் விழுந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மோடி, தலா ₹2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
News April 28, 2025
PM மோடி சொன்ன ஆப்… உங்ககிட்ட இருக்கா..?

‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் PM மோடி குறிப்பிட்ட SACHET செயலியின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? இந்திய வானிலை ஆய்வு துறையின் அதிகாரப்பூர்வ ஆப்பான இதில், தங்கள் பகுதியின் real-time வானிலையை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், பேரழிவு காலங்களில் இந்த செயலியின் மூலம் உதவி எண்கள், அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள் போன்ற தகவல்களையும் அறியலாம். இது 12 மொழிகளிலும் சேவை வழங்குகிறது. உங்ககிட்ட இருக்கா?
News April 28, 2025
திமுக ஆட்சி குறித்து பேச அதிமுகவிற்கு தகுதியில்லை: CM

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என பேசிய இபிஎஸ்-க்கு CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடி சாட்சி, அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என்று விமர்சித்த அவர், சட்டம் ஒழுங்கு குறித்து பேசவும், திமுக ஆட்சி மீது குற்றம் சாட்டவும் அதிமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்தாக விமர்சித்தார்.