News April 28, 2025
பெற்றோர் விவாகரத்து: மனம் திறந்த நடிகை ஸ்ருதிஹாசன்!

பெற்றோர் விவாகரத்தால் வாழ்க்கை தலைகீழாக மாறியதாக நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். அவரது தந்தை கமல்ஹாசன், தாயார் சரிகா இருவரும் பிரிந்தபோது ஸ்ருதிஹாசன் சரிகாவுடன் மும்பைக்கு சென்றார். ஆனால், அங்கு பெரும் சிரமத்தை அனுபவித்ததாக கூறிய அவர், BMWவில் இருந்த வாழ்க்கை லோக்கல் டிரைனுக்கு மாறியது எனத் தனது கசப்பான அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
Similar News
News December 25, 2025
செங்கோட்டையன் அதிர்ச்சி.. மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்

கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவிலிருந்து விலகிய வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். SP வேலுமணியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சந்திரசேகர், அதிமுகவில் MGR இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சந்திரசேகரனை வளைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக வேலுமணி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
News December 25, 2025
‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்?

‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதற்கு தெளிவான காரணம் தனக்கு தெரியவில்லை என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாததே முக்கிய காரணமாக இருக்கும் என கருதுவதாக அவர் கூறியுள்ளார். சூர்யா பிஸியாக இருந்ததால் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆனால், இடைவெளிவிட்டு ஷூட்டிங் நடத்தினால், பட்ஜெட் எகிறும் என்பதால் சூர்யா வெளியேறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. அதிரடி கைது

கடலூர் திட்டக்குடி அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டிவைடரில் மோதி எதிரே வந்த கார்கள் மீது மோதியதில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், பஸ் டிரைவர் தாஹா அலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.


