News April 27, 2025
கரூர்: அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு!

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, அமைச்சர் பதவியை தொடர்வதில் சிக்கல் எழுந்தது. இதனால் அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார் என சொல்லப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்த மதுவிலக்கு, ஆயத்தீர்வத்துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50,000 திருமண உதவி!

தமிழக அரசு சார்பில், பெற்றோரில்லாத பெண்களுக்காக, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், திட்டம் 1-ல் ரூ.25,000, திட்டம் 2-ல் ரூ.50,000 உதவித்தொகையோடு, தாலி செய்வதற்காக 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க, கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றோ அல்லது இ-சேவை மையங்களிலோ விண்ணப்பிக்கலாம். SHARE IT <<17007892>>(தொடர்ச்சி 1/2)<<>>
News July 9, 2025
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?

▶️அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவி திட்டம் – 1 இன் கீழ் உதவித்தொகை (ரூ.25,000) பெற கல்வித் தகுதி தேவையில்லை ▶️ திட்டம் – 2 இன் கீழ் உதவித்தொகை (ரூ.50,000) பெற டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ▶️ விண்ணப்பதாரர் பெற்றோர்களால் கைவிடப்பட்ட அல்லது பெற்றோர்களை இழந்தவராக இருக்க வேண்டும் ▶️ திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
News July 9, 2025
கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

ரெயில்வே தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்த பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16322) கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், ஆகஸ்ட் 31 வரை கரூர் வழியாக திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும். திண்டுக்கல் – நாகர்கோவில் இடையேயான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.