News April 27, 2025
பஹல்காமில் மீண்டும் சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த பஹல்காமில், பயங்கரவாத தாக்குதலால் சுற்றுலா தொழில் முடங்கியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பஹல்காமுக்கு சுற்றுலா பயணிகள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். எனினும், சம்பவம் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் மட்டும் சுற்றுலா பயணியரை பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. காஷ்மீரை முடக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு பயணியரின் வருகை சரியான பதிலடி!
Similar News
News December 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை கொலை.. காதலன் கைது

‘தி லயன் கிங்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகை இமானி ஸ்மித்(25) தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக கூறி காதலன் ஜோர்டான் டி. ஜாக்சன் என்பவரை சற்றுமுன் அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை இமானிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
EPS-ஐ நேரடியாக சந்தித்தார் பிரேமலதா

அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பேசப்படும் நிலையில், EPS-ஐ நேரடியாக சந்தித்திருக்கிறார் பிரேமலதா. ஆனால் இச்சந்திப்பில் அரசியல் பேசவில்லை என கூறிய அவர், குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவே சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் ஸ்டாலின் உள்பட பாஜக, காங்., சீமான், விஜய் என அனைவருக்கும் நேரில் அழைப்பிதழை கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
விஜய் ஒரு சங்கி.. மறைமுகமாக சாடிய கருணாஸ்

சினிமாவில் ₹200 கோடி சம்பளத்தை விடுத்து, ₹2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு விஜய் வந்துள்ளதாக கருணாஸ் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு சங்கி என மறைமுகமாக சாடிய கருணாஸ், அவர் எந்த உள்நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மக்கள் பிரச்னைகளை களத்தில் சென்று தீர்க்கும் நபரே உண்மையான தலைவன் எனவும் ஓடி ஒளிபவர் தலைவனாக முடியாது என்றும் பேசியுள்ளார்.


