News April 27, 2025

சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய கொத்தனார் 

image

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி  கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய செம்பனார்கோயில் முடிகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் சுந்தர்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.

Similar News

News December 16, 2025

மயிலாடுதுறை மக்களுக்கு அறிவிப்பு!

image

தமிழ் ஆட்சி மொழி சட்டம் 1956 இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வார கால ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

News December 16, 2025

மயிலாடுதுறை: குளத்தில் சடலம் மீட்பு

image

தர்மதானபுரம், ஆத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள சாவடி குளத்தில், (40) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, வைத்தீஸ்வரன் கோயில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்தது யார், எந்த ஊரை சேர்ந்தவர், இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

மயிலாடுதுறை: வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

மயிலாடுதுறை, பொறையாரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பொறையாா் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் டிச.20ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்துகொண்டு பயான்பெருமாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!