News April 27, 2025
ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News September 13, 2025
குறட்டை வராமல் தடுப்பது எப்படி?

தூங்கும்போது நமது நாக்கு தொண்டை பகுதியில் சிக்கிக் கொள்வதால் குறட்டை வருவதாக கூறப்படுகிறது. அதனை தவிர்க்க வழிகள் உள்ளன. தலையை சற்று உயர்த்தி படுக்க 2 தலையணை பயன்படுத்துங்கள். மது, சிகரெட் பழக்கமுள்ளவர்கள் அதனை குறையுங்கள். உடலில் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். நேராக படுக்காமல், இடது (அ) வலது புறம் திரும்பி படுங்கள். குறட்டை விடும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News September 13, 2025
மக்கள் மீது சுமையை மட்டுமே திமுக ஏற்றியுள்ளது: EPS

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என அனைத்தையும் உயர்த்தி, மக்களின் சுமையை அதிகரித்துவிட்டதாக EPS குற்றம்சாட்டினார். அதிமுகவின் திட்டங்களை நிறுத்திய ஸ்டாலினுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்றும், குடும்பத்தின் நலன்களை மட்டும் அவர் சிந்திப்பார் எனவும் EPS விமர்சித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லிய பலவற்றை நிறைவேற்றாமல், இப்போது வெற்று நாடகத்தை திமுக போடுவதாகவும் சாடினார்.
News September 13, 2025
கல்லீரலை காக்க… இதை கவனியுங்க

உடலில் 500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்யும் கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது. அப்படிப்பட்ட கல்லீரலை பராமரிக்க இவற்றை பின்பற்றவும்: *குளிர்பானம், சோடா, சர்க்கரையை தவிருங்கள் *உடல்பருமனை கட்டுப்பாட்டில் வையுங்கள் *வலிநிவாரணி மாத்திரைகள் கூடவே கூடாது *ஃபாஸ்ட்புட் உணவை தவிர்க்கவும் *மது, புகை வேண்டவே வேண்டாம் *கல்லீரல் அழற்சியை தவிர்க்கவும் *11 pm to 4 am கட்டாயமாக தூங்கவும்.