News April 27, 2025

தஞ்சாவூர்: விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு !

image

இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் காலியாக உள்ள 309 விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் (Air Trafiic Controller) பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி பி.ஈ /பி.டெக் முடித்த பொறியியல் பட்டதாரிகள் www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலைதேடும் உங்க நண்பருக்கு இதனை SHARE செய்யவும்..

Similar News

News November 4, 2025

தஞ்சை: பிணமாக மிதந்த மாணவர் உடல்!

image

பாபநாசத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டி(19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளித்து போது எதிர்பாராதவிதமாக சங்கரபாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சங்கரபாண்டியை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் ஆற்றில் மிதந்து வர தீயணைப்பு வீரர்கள் அதனை மீட்டனர்.

News November 3, 2025

தஞ்சாவூர்: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

தஞ்சை: கோயில் உண்டியலில் திருடியவர் கைது

image

கபிஸ்தலம் பாலக்கரையில் உள்ள சித்தி விநாயகர் ஆலய உண்டியலை உடைத்து பணம் திருடியதாக திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவரை கபிஸ்தலம் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் பாபநாசம், திருநீலக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள ஆலயங்களிலும் உண்டியல்களை உடைத்து பணம் திருடியதும், அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தாலிகளை திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது.

error: Content is protected !!