News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News April 28, 2025
அமைச்சர்களின் ராஜினாமா ஏற்பு

செந்தில் பாலாஜி, பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் SC காட்டிய கெடுபிடியால் செந்தில் பாலாஜியும், சைவம், வைணவம் குறித்த பேச்சு சர்ச்சையானதால் பொன்முடியும் அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. இருவரின் ராஜினாமா கடிதங்களையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேநேரத்தில், மீண்டும் அமைச்சராக மனோ தங்கராஜ் இன்று பதவி பிரமாணம் செய்துகொள்ள உள்ளார்.
News April 28, 2025
GT vs RR: யாருக்கு கிடைக்கும் ஹாட்ரிக்?

ஹாட்ரிக் வெற்றியை பெற GT அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க RR அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும். 6 போட்டிகளில் வென்றுள்ள GT, இன்றிரவு வாகை சூடினால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் செல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ள RR-க்கு பிளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய்விட்டது. ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்?
News April 28, 2025
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் பலி 52,000ஆக அதிகரிப்பு

இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் பலியானோரின் எண்ணிக்கை 52,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவுக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 52,243 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.