News April 27, 2025
செந்தில் பாலாஜி இலாகாக்கள், இனி இவர்கள் வசம்?

கோவையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளே அமைச்சராக <<16230061>>செந்தில் பாலாஜி <<>>பங்கேற்கும் கடைசி நிகழ்ச்சி எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்றும், அவர் வசமுள்ள மின்சாரத்துறை தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு, ஆயத்தீர்வை இலாகா முத்துசாமிக்கும் கூடுதலாக அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 28, 2025
தினமும் காலை இதை செய்வதால்…

சூர்ய நமஸ்காரம் என்பது சூரியனை வணங்கும் ஆசன முறையாகும். தினமும் காலை இதனை செய்வதால் ✦ரத்த ஓட்டம் சீராகும். இதய துடிப்பு மேம்படும் ✦அனைத்து தசைகளுக்கும் அழுத்தம் கிடைப்பதால், தசைகள் புத்துணர்ச்சி பெறும் ✦பதட்டம் குறையும். மனதில் அமைதியும் தெளிவும் கிடைக்கும் ✦காலையில் சூர்ய நமஸ்காரம் செய்வது, கலோரிகளை எரித்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது ✦ நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். SHARE IT.
News April 28, 2025
புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இன்று (ஏப்.28) முதல் ஜூன் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 28, 2025
இந்தியாவில் வாழ விடுங்கள்: கெஞ்சும் பாக். பெண்!

இந்தியரை திருமணம் செய்து, 2 குழந்தைகளை பெற்று, 35 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வரும் சாரதா பாய், தற்போது அவரது சொந்த நாடான PAK-கிற்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலக்கெடு முடிவதற்குள் நாடு திரும்ப ஒடிஷா போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அங்கு தனக்கென யாரும் இல்லை எனவும், தயவுசெய்து குடும்பத்தையும், தன்னையும் பிரித்துவிட வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியபடி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.