News April 27, 2025
குமரி அருகே ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி

தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. எண்ணெய் & எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு குமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி பொறுப்பேற்கிறார்.
News April 28, 2025
இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று 27ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News April 28, 2025
மத்திய அரசுக்கு மனோ தங்கராஜ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கு குமரி மாவட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல? 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.