News April 27, 2025

தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6ஆயிரம் 

image

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தபால் தலை சேகரித்து வைத்திருக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க 

Similar News

News November 18, 2025

குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

image

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News November 18, 2025

குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

image

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News November 18, 2025

குமரி: மிதிவண்டி இணைப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாகங்கள் இணைக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மிதிவண்டி தொழிலில் அனுபவம் உள்ள விருப்பமுள்ளவர்கள் நவ.21க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். ஷேர்.

error: Content is protected !!