News April 27, 2025

தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6ஆயிரம் 

image

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தபால் தலை சேகரித்து வைத்திருக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க 

Similar News

News April 28, 2025

இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்

image

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேற்று 27ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன், மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 28, 2025

மத்திய அரசுக்கு மனோ தங்கராஜ் கேள்வி

image

பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கு குமரி மாவட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல? 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 27, 2025

அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

image

காட்டுவிளை பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்தை, வாலிபர் ஒருவர் வழிமறித்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்துள்ளார். இதுகுறித்து, பஸ் ஓட்டுநர் ராஜேஷ்குமார், கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜோயல் ராபர்ட் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது 4 பிரிவுகளில் இன்று வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!