News April 27, 2025

நாமக்கல் போலீஸ் அதிரடி நடவடிக்கை!

image

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு தன்ராஜ் தலைமையில், நல்லூர் போலீசார் நடத்திய கள்ளச்சாராய தேடுதல் வேட்டையில், திடுமல் குட்ட பள்ளக்காடு பகுதியை சேர்ந்த பெரியசாமி, பாலசுப்ரமணியம், பூபதி, முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஊறல் சாராயம், 17 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்தனர்.

Similar News

News April 27, 2025

நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 27) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.20 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

News April 27, 2025

நாமக்கல்: ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு 

image

ராசிபுரம் அடுத்து அத்திப்பலகானூர் அருகே ரயிலில் இருந்த பயணி ஒருவர் தவறி விழுந்ததாக, பயணிகள் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து தவறி விழுந்தாரா? வேறு ஏதும் காரணங்களா என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

News April 27, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலையில் மாற்றம் இல்லை!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த (ஏப்.25) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.8 உயர்த்தப்பட்டு ஒரு கிலோ ரூ.88 நிர்ணயிக்கப்பட்டது. இன்று (ஏப்-27) நடைபெற்ற கூட்டத்தில் கறிக்கோழி விலை மாற்றம் செய்யவில்லை. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

error: Content is protected !!