News April 27, 2025
வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 26 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் அம்பலம் ஆகவே தலைமறைவாக இருந்த அவரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற மோசடியில் சிக்காமல் உஷாரா இருங்க.
Similar News
News August 25, 2025
கள்ளக்குறிச்சி மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511471>>தொடர்ச்சி<<>>
News August 25, 2025
புகார் எண் 104ன் சேவைகள்

இந்த 104 எண் மூலம் தரமற்ற சேவை தரும் மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், ஓட்டல்கள் பற்றியும் புகார் செய்யலாம். மேலும் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் இங்குள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். மருத்துவத்துறையில் மகப்பேறு, இருதயம், நீரிழிவு, காது மூக்கு தொண்டை, குடல்இறப்பை, தோல் மருத்துவபிரிவுகளைச் சேர்ந்த 20 மருத்துவ நிபுணர்கள் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். SHARE
News August 25, 2025
கள்ளக்குறிச்சி: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் மானியம்…

தமிழ்நாடு அரசு BC/MBC/DNC (ம) சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்களுக்கு Readymade Garments அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தருகிறது. தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சுயதொழில் தொடங்கி பொருளாதார மேம்பாடு அடைய Readymade Garments அமைக்க இது உதவும். ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தபிற்பட்டோர் நல அலுவலகத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. மேலும் விபரங்களுக்கு <<17510081>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>