News April 27, 2025
வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.
Similar News
News October 23, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா ஆகிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 22, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.22) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவர் பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.
News October 22, 2025
வேலூர்: நெல் நடவு இயந்திரங்கள் வழங்கிய எம்.பி

வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும் வேலூர் எம்.பியுமான கதிர் ஆனந்த், இன்று (அக்.22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கலெக்டர் சுப்புலட்சுமி, எம்எல்ஏக்கள் அமுலு விஜயன் (குடியாத்தம்), வில்வநாதன் (ஆம்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.