News April 27, 2025

வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

image

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.

Similar News

News April 28, 2025

வேலூர் இறகு பந்து பயிற்சி வீரர்கள் தேர்வு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்டார் அகாடெமி இறகு பந்து பயிற்சி மையத்திற்கு வீரர்கள் தேர்வு நாளை (ஏப்ரல் 28) காலை 6:30 மணியளவில் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் 12 வயது முதல் 20 வயதுக்குள் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு விளையாட்டு வீரர்களுக்கு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

வேலூர் காவல் துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (ஏப்ரல் 27) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News April 27, 2025

சேம்பாக்கம்: திருட முயன்றவர்களுக்கு தர்மஅடி

image

வேலூர், சேம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் தாமோதரன் என்ற இருவரும் வாணியம்பாடி மாட்டுச் சந்தையில் ஏப்ரல் 26 அன்று இருசக்கர வாகனம் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடனடியாக இருவர் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!