News April 27, 2025
காஷ்மீர் இளைஞனின் உயிர் தியாகம்.. ஷிண்டே நிவாரணம்

பஹல்காம் தாக்குதலின் போது, சுற்றுலாவாசிகளை காப்பாற்ற முயன்று உயிரிழந்த குதிரை ஓட்டி ஹுசேன் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். ஹுசேனின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசிய அவர், உங்களுடைய மகனின் தியாகம் வீண் போகாது என ஆறுதல் கூறினார். தீவிரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஹுசேன் கொல்லப்பட்டார்.
Similar News
News April 27, 2025
25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்.. கணவரின் திட்டம்!

வரதட்சணையாக ₹50 லட்சமும், 100 பவுன் நகையும் பெற்றுக்கொண்டு கேரளாவின் ஷாகா குமாரியை (52) அருண் (27) 2020-ல் திருமணம் செய்கிறார். கல்யாண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடும் ஷாகா, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அருணை வற்புறுத்துகிறார். ஆனால், ந்த இரண்டுலுமே அருணுக்கு விருப்பமில்லை. இதனால், ஷாகாவை கரண்ட் ஷாக் வைத்து கொலை செய்த நிலையில், அவருக்கு தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
News April 27, 2025
போலி சான்றிதழ் வழக்கு…உ.பி. Dy. CM-க்கு செக்

உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு எதிரான போலி சான்றிதழ் வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிட, போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என பாஜகவை சேர்ந்த திவாகர் நாத் திரிபாதி என்பவர் 2021-ல் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பல்வேறு கட்டங்களை கடந்து வந்துள்ள நிலையில், மவுரியாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை மே 6-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளது.
News April 27, 2025
பணமோசடி வழக்கு…மகேஷ் பாபு ஆப்செண்ட்

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் ED சம்மன் அளித்திருந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு ஆஜராகவில்லை. பணமோசடி தொடர்பாக, சாய் சூர்யா, சுரானா நிறுவனங்களில் ED சோதனை மேற்கொண்டது. அப்போது, மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குக்கு அவற்றில் இருந்து ₹11.4 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வேறொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரி மகேஷ் பாபு ED-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.