News April 27, 2025

PAK-க்கு ஆதரவாக பேசிய இந்தியர்கள்!

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அசாம், திரிபுரா, மேகாலயாவில் மட்டும் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அசாமில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். MLA, செய்தியாளர், மாணவர்கள், வழக்கறிஞர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கைதுக்கு உள்ளாகியுள்ளனர்.

Similar News

News April 27, 2025

பணமோசடி வழக்கு…மகேஷ் பாபு ஆப்செண்ட்

image

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் ED சம்மன் அளித்திருந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு ஆஜராகவில்லை. பணமோசடி தொடர்பாக, சாய் சூர்யா, சுரானா நிறுவனங்களில் ED சோதனை மேற்கொண்டது. அப்போது, மகேஷ் பாபுவின் வங்கிக் கணக்குக்கு அவற்றில் இருந்து ₹11.4 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், வேறொரு நாளில் விசாரணைக்கு ஆஜராக அனுமதி கோரி மகேஷ் பாபு ED-க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

News April 27, 2025

பஹல்காம் தாக்குதல்; பாஜக ஆதாயம்…TMC எம்பி அட்டாக்

image

பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவதற்கான நேரம் இதுவல்ல என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் வந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஊடகங்களில் அரசின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விவாதங்களுக்கு பதிலாக, பாஜக ஆதாயம் அடையும்படியான செய்திகள் வெளியாகின்றன சாடியுள்ளார்.

News April 27, 2025

BREAKING: செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

image

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரத்துறை சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி வசமிருந்த வனத்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!