News April 4, 2024
ஆடுகளை தத்தெடுக்க அழைக்கும் நகரம்

காட்டு ஆடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், அவற்றை தத்தெடுக்க வருமாறு இத்தாலிய தீவு நகரமான அலிகுடி (Alicudi) மேயர் ரிக்கார்டோ குல்லோ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 5 சதுர கி.மீ தொலைவு கொண்ட தீவில், 100 மக்களுக்கு, 6 மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதர்களுடன் அமைதியாக வாழ்ந்தாலும், தாவரங்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு ஆடுகள் அதிக சேதங்களை விளைவிக்கின்றதாம்.
Similar News
News January 15, 2026
ஈரானின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து திரும்ப பெற்றுள்ளது. அல் உதெய்த், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாகும்.
News January 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 15, 2026
மும்பையை கைப்பற்ற போராடுவது இதனால்தான்!

நாட்டின் நிதி தலைநகரமான மும்பையில் இன்று நகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நகரத்தின் 2025-26 பட்ஜெட் ₹74,427 கோடியாகும். இது கோவா (₹28,162 கோடி), அருணாச்சல் பிரதேசம் (₹39,842 கோடி), ஹிமாச்சல் (₹58,514 கோடி), சிக்கிம் (₹31,412 கோடி) ஆகிய 4 மாநிலங்களின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமாகும். அதனால் தான், மும்பை நகராட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன.


