News April 4, 2024
ஆடுகளை தத்தெடுக்க அழைக்கும் நகரம்

காட்டு ஆடுகளின் எண்ணிக்கை பெருகி வருவதால், அவற்றை தத்தெடுக்க வருமாறு இத்தாலிய தீவு நகரமான அலிகுடி (Alicudi) மேயர் ரிக்கார்டோ குல்லோ மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 5 சதுர கி.மீ தொலைவு கொண்ட தீவில், 100 மக்களுக்கு, 6 மடங்கு அதிக எண்ணிக்கையில் ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. மனிதர்களுடன் அமைதியாக வாழ்ந்தாலும், தாவரங்கள், பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு ஆடுகள் அதிக சேதங்களை விளைவிக்கின்றதாம்.
Similar News
News January 12, 2026
காஞ்சிபுரம் முழுவதும் 7 வட்டாட்சியர்கள் மாற்றம்!

காஞ்சிபுரம் தாசில்தார் ரபீக் இருங்காட்டுக்கோட்டை நில எடுப்பு பிரிவு தனித் தாசில்தாராக தற்போது மாற்றம். உத்தரமேரூர் தாசில்தாராக இருந்த ஆர்.சுந்தர் கேபிள் டிவிக்கு மாற்றப்பட்டு உள்ளார். பரந்தூர் விமான நிலைய தாசில்தார் நிலை எடுப்பு பிரிவு நடராஜன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உத்திரமேரூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர், இன்று (ஜன.12) உத்தரவிட்டுள்ளார்.
News January 12, 2026
பொங்கலுக்கு அடுத்த ஜாக்பாட்.. பெண்களுக்கு HAPPY NEWS

பொங்கலுக்குள் பெண்களுக்கு அடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாக இருப்பதாக <<18826786>>ஐ.பெரியசாமி<<>> நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், 2026 தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது குறித்த ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 3 நாள்களே இருப்பதால், நாளை அல்லது நாளை மறுநாள் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 12, 2026
பஸ்ஸில் அதிக கட்டணமா? இங்கு புகார் செய்யலாம்!

பொங்கலையொட்டி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் போன் வாயிலாகவோ, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் ஆகவோ புகார் அளிக்கலாம் என TN அரசு அறிவித்துள்ளது. மேலும், அதிகம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.


