News April 27, 2025
பாக். PM-க்கு முக்கியத்துவம் தர தேவையில்லை: உமர்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயார் என்ற பாகிஸ்தான் பிரதமரின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் தர தேவையில்லை என J&K முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாதான் இத்தாக்குதலை நடத்தியதாக கூறியவர்கள் அவர்கள் எனவும், தற்போது சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறினால், அது நமது எதிரிகளுக்கு வெற்றியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 27, 2025
BREAKING: செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா

தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். செந்தில் பாலாஜியின் வசம் இருந்த மின்சாரத்துறை சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொன்முடி வசமிருந்த வனத்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
News April 27, 2025
இடம் பெயரும் கேது.. 3 ராசிக்காரர்கள் ஜாக்கிரதை!

கேது பகவான், சிம்ம ராசிக்குள் நுழைவதால் 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 1)மேஷம்: பணியிடத்தில் வேலை அழுத்தம் அதிகமாக இருக்கும். வியாபாரிகள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். 2) கும்பம்: சில பணிகளில் தாமதம் ஏற்படலாம். பொருளாதார ரீதியாக செலவுகள் அதிகரிக்கலாம். 3) சிம்மம்: தனிப்பட்ட, தொழில் வாழ்க்கையில் பிரச்னை அதிகரிக்கும். மன ஆரோக்கியம் ஏற்ற இறக்கமாக இருக்குமாம்.
News April 27, 2025
குடும்பநல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறை

தமிழகம் முழுவதும் உள்ள குடும்பநல நீதிமன்றங்களுக்கு 15 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பெண் வழக்கறிஞர்கள் சார்பில் கோடை விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்ற சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி, மே 1 முதல் 15-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் உள்ள குடும்பநல கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் தகவலை பகிருங்க.