News April 26, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஏப்ரல்.26) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News April 27, 2025
மயோனைஸ் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை -ஆட்சியர்

நெல்லை கலெக்டர் சுகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தந்தூரி சிக்கன், சவர்மா போன்ற உணவுகள் இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்துள்ளது. அதில் பயன்படுத்தப்படும் மயோனைஸ் கேடு விளைவிப்பதாக அதனை ஒரு ஆண்டுக்கு விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே உணவு நிறுவனங்கள் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டார்.
News April 27, 2025
நெல்லை: விடுமுறையில் சிறுவர்களின் விபரீத விளையாட்டு

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லையில் சிறுவர்கள் வெயிலையும் கவனிக்காமல் பொது இடங்களில் கூடி விளையாடி வருகின்றனர். மேலப்பாளையம் ரயில் நிலையம் பகுதியில் இன்று சில சிறுவர்கள் தண்டவாளத்தில் சிறிய ஜல்லிக்கற்களை அடுக்கி வைத்து அபாயகரமான விளையாட்டு விளையாடுகின்றனர். இதை அங்கு வந்த ரயில் பயணங்கள் சங்கத்தினர் கண்டித்து அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
News April 27, 2025
நெல்லை மாவட்ட வட்டாட்சியர்கள் எண்கள்

சான்றிதழ்கள், நில ஆவணங்கள், வரி வசூலிப்பு, விசாரணை போன்றவைகளை வட்டாட்சியர் ஆய்வு செய்வார்
திசையன்விளை -9384094224
சேரன்மகாதேவி -9384094223
மானூா் -9384094222
இராதாபுரம் -9445000674
நாங்குநோி -9445000673
அம்பாசமுத்திரம் -9445000672
பாளையங்கோட்டை -9445000669
திருநெல்வேலி -9445000671
*ஷேர் பண்ணுங்க