News April 26, 2025
இடுக்கண் வருங்கால் நகும் பாகிஸ்தானியர்

போர்ச் சூழலிலும், கையாலாகாத தங்கள் அரசைக் கிண்டலடித்து பாகிஸ்தானியர்கள் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தியா குண்டு வீசுமா?’ என ஒருவர் கேட்க, ‘அந்த அளவுக்கு இந்தியா முட்டாளல்ல’ என்கிறார் மற்றொருவர். அதற்கு மூன்றாமவர், ‘இந்தியா முட்டாளாகவே இருக்கட்டும், அப்பத்தான் இந்த கொடுமை முடியும்’ என்கிறார். மேலே படங்களை புரட்டிப் பாருங்கள், பாகிஸ்தானியர்களின் நகைச்சுவைக்கும் பின் இருக்கும் சோகம் தெரியும்.
Similar News
News April 27, 2025
வருமான உச்ச வரம்பு உயர்வு: TN அரசு அறிவிப்பு

கடந்த ஏப்.17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளின்படி, தமிழகம் முழுவதும் 86,000 பேருக்கு புறம்போக்கு நிலத்துக்கான பட்டா வழங்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதோடு, புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க வருமான உச்ச வரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ₹5 லட்சமாக உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும்.
News April 27, 2025
CBSE 10,12 தேர்வு முடிவுகள் எப்போது? புதுத் தகவல்

CBSE 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதிய மாணவர்கள், முடிவு எப்போது வெளியாகும் என காத்திருக்கின்றனர். அந்த முடிவுகள், கடந்த 2023-ம் ஆண்டு மே 10, மே 9-ம் தேதிகளில் வெளியாகின. இதேபோல் கடந்த 2024ம் ஆண்டு மே 15, மே 12-ம் தேதிகளில் வெளியாகின. இதை சுட்டிக்காட்டியுள்ள கல்வி ஆர்வலர்கள், இந்தாண்டும் மே மாதம் மத்தியிலேயே தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். SHARE IT.
News April 27, 2025
2026-ல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. உதயகுமார் உறுதி

2026 தேர்தலில் வென்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி என்று EX அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுக அரசின் தவறுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2026 தேர்தலுக்கு அதிமுக வலுவான கூட்டணி அமைத்துள்ளதாகவும், ஆதலால் தேர்தலில் வெற்றி உறுதி என்றும் குறிப்பிட்டார்.