News April 26, 2025

சுந்தரவடிவேல் சுவாமிகளின் ஆருடம் நடக்குமா?

image

2026 தேர்தலில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும், திமுக அமைச்சர்களின் நாக்கில் சனி இருப்பதால் பலர் ஜெயிலுக்குப் போவார்கள். 2027க்கு பின் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் காலம் வரும் என்று தேனி மகாசக்தி பீடம் மடாதிபதி சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறியுள்ளார். கடந்த காலங்களில், ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார், 3ஆவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் இவர் ஆருடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 27, 2025

தேனியில் ஒரு இளநீர் ரூ.100 தாண்டும் – விவசாயிகள்

image

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் இளநீரை விரும்பி பருகி வருகின்றனர். நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டு ரக மரங்களின் இளநீர் தேனியில் 60 முதல் 70 வரை விற்பனையாகிறது. இந்நிலையில், ஒரு இளநீர் விலை 100 ரூபாயை தாண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

News April 27, 2025

தேனியில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயம் இல்லை

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதார் பாலாஜி என்பவர் முதல்வர் தனிப்பிரிவுக்கு பள்ளிகளில் மாணாக்கர்களை சேர்ப்பதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக புகார் அளித்திருந்தார். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாணாக்கர்களை பள்ளிகளில் சேர்க்கவும், பொது தேர்வு எழுதவும் ஆதார் கட்டாயம் இல்லை என்ற தகவலை புகார்தாரருக்கு தெரிவித்துள்ளார்.

News April 27, 2025

தேனியில் ஆட்டுக்கொல்லி தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

image

தேனி மாவட்டத்தில் ஆடுகளுக்கு ஏற்படும் வியாதிகளில் பெருமளவில் ஆடுகளை தாக்கும் நோய் ஆட்டுக்கொல்லி நோய் என்று குறிப்பிடப்படுகிறது இதனால் தேனி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மே 27ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார் இதனால் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் தகவல்

error: Content is protected !!