News April 26, 2025
மேல்மலையனூருக்கு 65 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை ஊஞ்சல் சேவை நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழக வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 35 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 15 பஸ்கள் என மொத்தம் 65 பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
Similar News
News April 27, 2025
வேலூர்: கஷ்டங்களை நீக்கும் கால பைரவர்

வேலூர் மாவட்டம் செங்காநத்தம் மலையில் காலபைரவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு 10 கைகளுடன் 3 1/2 அடி உயரத்தில் பைரவர் அருள்பாலிக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் அஷ்டமி நாளில் வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும். மேலும், 108 ஒரு ரூபாய் நாணயத்தால் அபிஷேகம் செய்தால் பணக்கஷ்டம் மற்றும் இழந்த செல்வத்தை மீட்கலாம் என்பது ஐதீகம். கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்
News April 27, 2025
வேலூர்: தலைமறைவான குற்றவாளி கைது

பேரணாம்பட்டு டவுன் பகுதியைச் சேர்ந்த இம்ரான் அஹம்மத் (25) மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு இம்ரான் அஹம்மத் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து இம்ரான் அஹம்மத் மீது ஜாமீனில் வெளியில் வராதவாறு பிடிவாரண்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த இம்ரான் அஹமதை நேற்று கைது செய்தனர்.
News April 27, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும் பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் படி 4 பேர் கொண்ட புகார் குழு அமைத்திட வேண்டும். மேலும் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். குழு அமைக்கப்பட்ட விவரத்தை tnswd-poshicc.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.