News April 26, 2025
மதுரை: பூனையால் பறிபோன உயிர்

அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்ற இளைஞர் பூனை கடியால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் தான் சிகிச்சை பெற்று வந்த ரேபிஸ் வார்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
மதுரை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

மதுரை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0452‑2584266, தொழிலாளர் துணை ஆணையர் – 00452‑2601449 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News August 10, 2025
JUST IN: மதுரை விவசாயிக்கு நேர்ந்த சோகம்

மதுரை மாவட்டம் விளாச்சேரி அருகே மின்சாரம் தாக்கிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார். தோட்டத்தில் நிலத்திற்காக போடப்பட்ட மின்சார வேலியை தொட்ட நிலையில் விவசாயி கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News August 10, 2025
அதிமுகவில் மேலும் இரு மாவட்ட செயலாளர்கள்

மதுரையில் அதிமுக நகர், புறநகர் மேற்கு, கிழக்கு என 3 மாவட்டங்கள் உள்ளன. மாவட்ட செயலாளராக உள்ள செல்லுார் ராஜூ, உதயகுமார், ராஜன்செல்லப்பா ஆகியோர் ‘சீனியர்கள்’. இந்த 3 மாவட்டங்களை 5 மாவட்டங்களாக்கும்பட்சத்தில் பழனிசாமியின் தீவிர விசுவாசியும், மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் சரவணன் உட்பட 2 பேர் ஜாதி அடிப்படையிலும், வசதி, மக்கள் செல்வாக்கு அடிப்படையிலும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.