News April 26, 2025

பிரபலங்களை கவர்ந்த கத்திரிக்காய்

image

வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தில் பயிர் செய்யப்படும் முள்கத்திரிக்காய் மிகவும் பிரபலம். இலவம்பாடி கத்திரிக்காய் என அழைக்கப்படும் இதன் சுவை காரணமாகவே பலரை விரும்ப வைத்துள்ளது. முன்னாள் குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமன், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோரும் இதை விரும்பி சாப்பிட்ட பெருமை இலவம்பாடி கத்தரிக்காய்க்கு உண்டு. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 26, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பல்வேறு பகுதிகளில் இரவு ரோந்து நடக்கிறது. வேலூர், காட்பாடி, அரக்கோணம், சூரியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் நேரடி கண்காணிப்பு செய்ய உள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 25, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்!

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 25, 2025

வேலூர் மக்களே.. லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க.!

image

வேலூர் மக்களே.. சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் கண்டிப்பாக ஒரு முறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27667070) என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.

error: Content is protected !!