News April 26, 2025
என்எல்சியை மூட வேண்டும்: அன்புமணி அறிக்கை

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பைவிட115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 27, 2025
கடலூர் மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

▶புவனகிரி தனி (சா.பா.தி) வட்டாட்சியர்-9786959669, ▶ஸ்ரீமுஷ்ணம்-8754915054, ▶வேப்பூர்-9543809145, ▶திட்டக்குடி-9360021593, ▶விருத்தாசலம்-9789847533, ▶காட்டுமன்னார்கோவில்-9003927728, ▶சிதம்பரம்-9444216903, ▶குறிஞ்சிப்பாடி-9486680820, ▶பண்ருட்டி-9842939371. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
News April 27, 2025
அமாவாசை அன்று தரிசிக்க வேண்டிய கோயில்கள்

இன்று சித்திரை மாதம் அமாவாசை என்பதால் கோயிலுக்கு செல்வது, முன்னோர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அமாவாசைக்கு பிரசித்தி பெற்ற வழிபட வேண்டிய 5 கோயில்கள்: 1.சிதம்பரம் அனந்திஸ்வரர் கோயில், 2.கடலூர் பாடலீஸ்வரர் கோயில், 3.விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயில், 4.புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில், 5.திருவக்குளம் பாசுபதீஸ்வரர் கோயில். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 27, 2025
வடலூர்: ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

அரியலூரை சேர்ந்தவர் சசிகுமார்(40). இவர் தனது ஆட்டை நேற்று வடலூர் சந்தையில் விற்றுவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். குறவன்குப்பம் அருகில் சென்றபோது, உடல் உபாதை காரணமாக பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது திருச்சி நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் மோதி சசிக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து கடலூர் இருப்புப்பாதை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.