News April 26, 2025
நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!
Similar News
News January 12, 2026
நெல்லை: அமெரிக்க கரன்சி மூலம் ரூ.20 லட்சம் மோசடி

சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் ஷாகுல் ஹமீதிடம் மாரியப்பன் என்பவர் ரூ.20 லட்சம் அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாற்றி தர கேட்டுள்ளார். இதை நம்பி ஷாகுல் ஹமீது நெல்லை வந்து 21,280 அமெரிக்க டிஜிட்டல் கரன்சியை மாரியப்பன் வாலட் கணக்கிற்கு ஏற்றியுள்ளார். ஆனால் அதற்கான ரூ.20 லட்சத்தை கொடுக்காமல் மாரியப்பன் தப்பியுள்ளார். புகாரின் பேரில் பாளை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News January 12, 2026
நெல்லை: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

நெல்லை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் எண் இணைக்காதவர்கள் <
News January 12, 2026
நெல்லை: ரூ.12,000 வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெல்லை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் பஹ்மிதா ஷக்வத். வழக்கறிஞரான இவர் அங்குள்ள ஒரு கடையில் பீட்சா வாங்கியபோது கடை விளம்பரத்துடன் கூடிய பார்சல் பாக்சுக்கு கூடுதலாக ரூ.4 வசூலிக்கப்பட்டது. இதுக்குறித்து அவர் அளித்த புகாரின் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் விசாரித்து சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்குள் ரூ.12,000 வழங்க உத்தரவிட்டது.


