News April 26, 2025
அமைச்சரின் தொகுதியிலேயே கலப்படம் – பாஜக குற்றச்சாட்டு

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியின் திண்டுக்கல் மாவட்டத்திலேயே பருப்பில் கலப்படம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர் நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தெரிவித்துள்ளார். தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
Similar News
News November 9, 2025
தொடரும் கொடூரம்: 4 வயது சிறுமிக்கு வன்கொடுமை

மே.வங்கத்தில் கடந்த சில மாதங்களாக தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், கொல்கத்தா ஹூக்லி நகரின் தாரகேஷ்வர் ரயில் நிலையத்தில், பாட்டியுடன் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி மீட்கப்பட்ட நிலையில், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
News November 9, 2025
7 நாள்களுக்கு 7 மூலிகை சாறுகள்!

இன்றைய சூழலில் அடிக்கடி உடலில் ஏதாவது ஒரு நோய் வந்து கொண்டே இருக்கிறது. நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் எளிய மூலிகைகள் பல, உடலை வலுப்படுத்தவும், நோய்களை குறைக்கவும் உதவுகின்றன. ஆனால் அதை மருந்தாக சாப்பிடுவது பலருக்கும் சிரமமாக உள்ளது. ஜூஸ் ஆக குடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றனர். அப்படி, வாரம் முழுவதும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் 7 மூலிகை சாறுகள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.
News November 9, 2025
BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.


