News April 26, 2025
டி.ஜெ., மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

டி.ஜெயகுமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது. 2022-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி, திமுக உறுப்பினர் நரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக டி.ஜெ., அவரின் ஆதரவாளர்கள் என 40 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
Similar News
News April 27, 2025
இந்தியாவிற்கு எதிராக போர் அறிவிப்பு

பாக். ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு எதிராக போரை அறிவித்துள்ளது. ஜம்மு & காஷ்மீரில் ஆயுதப்போராட்டத்தை தொடங்க தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அல்லாவின் ஆதரவில் இது நிகழ்த்தி காட்டப்படும் எனவும், காஷ்மீர் ஜிகாத் போராட்டம் நடக்கும் என்றும் கூறியுள்ளது.
News April 27, 2025
வெயில் கொளுத்தும்.. வெளியே வராதீங்க..

கோடை வெயில் வாட்டி வதைப்பதால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இயல்பை விட இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசௌகரியம் ஏற்படலாம். எனவே, பிற்பகல் 11 மணி முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும். அதிகளவில் நீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்
News April 27, 2025
உலக ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ரிலையன்ஸ்

நிகர மதிப்பின் அடிப்படையில், உலகின் மிகவும் மதிப்புமிக்க 25 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமம் இணைந்துள்ளது. ப்ளூம்பெர்க் தரவுகளின் படி, $118 பில்லியன் நிகர மதிப்புடன் ரிலையன்ஸ் 21ஆம் இடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் மைக்ரோசாஃப்ட், அலிபாபா, ஆல்பாபெட் உள்ளிட்ட உலகளாவிய ஜாம்பவான் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும், இதன் சந்தை மூலம் $140 பில்லியனாக உயர்ந்துள்ளது.