News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 27, 2025
இளம்பெண் பலமுறை பலாத்காரம்

மகாராஷ்டிராவில் 24 வயதான இளம்பெண் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அப்பெண் அளித்த புகாரில், ஆக.10 – ஏப்.23-க்குள் ஐ.டி. ஊழியர் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோ, போட்டோ எடுத்து ₹2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 27, 2025
பாகிஸ்தானுக்கு பதிலடியா? மக்களுக்கு அரவணைப்பா?

காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும் என்று சிலரும் அப்பாவி பாகிஸ்தான் மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என்று சிலரும் கருத்து கூறுகின்றனர். உங்களது கருத்து என்ன?