News April 4, 2024
12 மாவட்டங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந் நிலையில், ஈரோட்டில் அதிகபட்சமாக இன்று 41.11 டிகிரி செல்சியஸ் (106 டிகிரி F) வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல, கரூர், சேலம், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூரில் 40 டிகிரி செல்சியஸ், திருத்தணி, மதுரை, வேலூர், நாமக்கல்லில் 39.44 டிகிரி செல்சியஸ், கோவை, தஞ்சையில் 38.33 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
Similar News
News April 21, 2025
BREAKING: மும்பை அணியிடம் வீழ்ந்தது CSK

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(53), ஷிவம் துபே (50) அரைசதம் அடித்தனர். தொடந்து ஆடிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அரைசதம் அடித்த ரோஹித்(76) மற்றும் சூர்யகுமார் யாதவ்(68) அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்ததால் ஃப்ளேஆஃப் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
News April 21, 2025
31 பந்துகளில் அரைசதம்.. ரோஹித் மீண்டும் அதிரடி

நடப்பு சீசனில் தொடர்ந்து தடுமாறி வந்த ரோஹித்
சர்மா சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். மும்பைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக பெற்று தந்த ரோஹித் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தார். இதனால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த அவர் இன்றைய போட்டியில் பேட்டால் பதில் அளித்துள்ளார். ரோஹித் 31 பந்துகளை அரைசதம் அடிக்க, மும்பை அணி 13 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்துள்ளது.
News April 21, 2025
பெனினில் தீவிரவாதிகள் தாக்குதல்… 70 வீரர்கள் பலி

பெனின் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 70 வீரர்கள் பலியாகினர். ராணுவச் சாவடிகளில் அண்மைகாலமாக அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாகாணத் தலைநகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 70 வீரர்களை கொன்று விட்டதாக அல்கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவம் தரப்பில் பதில் இல்லை.