News April 26, 2025

மயிலாடுதுறை: 3935 அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பு

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

Similar News

News April 26, 2025

மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் பலி

image

கருவாழக்கரை மேலையூர் உத்திராபதியார் ஆலய அமுதுபடையல் திருவிழாவிற்க்காக  அமைக்கப்பட்டிருந்த ஒலி ஒளியின் மின் கம்பியை சரியான முறையில் கட்டாததால் அறுந்து கீழே விழுந்ததில் அருகே விளையாடிக் கொண்டிருந்த மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கதுரை மகன் தமிழ்துரை (வயது15) மின்சாரம் தாக்கி நேற்று இரவு சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 26, 2025

மயிலாடுதுறை: கேது தோஷம் நீக்கும் தலம்

image

மயிலாடுதுறை மாவட்டம், கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாதர் கோயிலில், கேது பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் கேது பகவான் இன்று மாலை 4:20 மணிக்கு சிம்ம ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்…

News April 26, 2025

மயிலாடுதுறை: கூலித்தொழிலாளி தற்கொலை

image

மணல்மேடு அருகே காருக்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வேல்முருகன் (39). சம்பவத்தன்று வேல்முருகன், மது குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது, அவருக்கும், குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில், மன வேதனை அடைந்த வேல்முருகன், தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!