News April 26, 2025
சிவகாசி: முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தீக்குளிக்க முயற்சி

சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2021 முதல் 2025 வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் கவிதா பாண்டியராஜன். இந்த ஊராட்சியில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்ட வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவை நிதியை வழங்காமல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக கூறி யூனியன் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 5, 2025
விருதுநகர்: தலைமை செயலகத்தில் வேலை

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 5, 2025
வெம்பக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வெம்பக்கோட்டை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் என்ற கண்ணன்(42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
விருதுநகர்:காரின் மேல் அமர்ந்து சென்றவர்கள் மீது வழக்கு

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து விதிமுறைகளை மீறி காரின் கதவுகளை திறந்தபடியும், அதன் மேலே உட்கார்ந்தபடியும் சென்ற 9 வாகனங்கள் மீது அருப்புக்கோட்டை, திருச்சுழி போலீசார் வழக்கு பதித்துள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து விதிகளை மீறிய மற்ற வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட உள்ளது.


