News April 26, 2025
சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பேட்டி ஒன்றில் எந்த ஆதாரமும் இன்றி இந்தியா தங்களை குற்றம்சாட்டி வருவதாக பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். போர் வெடிப்பதை விரும்பவில்லை என தெரிவித்த அவர் போரால் பேரழிவு மட்டுமே ஏற்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News April 26, 2025
மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் காலமானார்

நாட்டின் மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரளாவை சேர்ந்த இவர், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்(ICHR) அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். கேரள வரலாறு, தமிழக வரலாறு, பண்டைய இந்திய வரலாறு, வரலாறு வரைவியல் முறையியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
News April 26, 2025
CSK போட்டியை பார்க்க ரெடியா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ம் தேதி CSK, PBKS அணிகள் மோதவுள்ளன. அதற்கான டிக்கெட் விற்பனை, நாளை (27.04.2025) காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு அடியும் பிடியுமாக நடந்த டிக்கெட் விற்பனை, CSK-வின் தொடர் தோல்வியால் மந்தமடைந்துள்ளது. இதனால், நாளைய டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News April 26, 2025
நாளை காலை Chicken வாங்க போறீங்களா?

வார விடுமுறையான ஞாயிறுக்கிழமை (நாளை) அசைவம் சாப்பிடாதவர்களே இருக்க முடியாது. இதனால், சிக்கன், மட்டன் வாங்க காலையிலேயே மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதும். நாளை சிக்கன் வாங்க செல்வோர் இப்போதே விலையை தெரிந்து கொள்ளுங்கள். ஆம்! நாமக்கல்லில் கறிக்கோழி ஒரு கிலோ (உயிருடன்) ₹88-ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹85-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.