News April 4, 2024

உணவு வரவில்லை என புகார் கூறியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி

image

ஸ்விக்கியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என கஸ்டமர் கேர் எண்ணிற்கு போன் செய்த 65 வயது முதியவரின் வங்கிக்கணக்கில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூகுளில் தேடி குறிப்பிட்ட எண்ணுக்கு அழைத்த முதியவருக்கு முதலில் ரூ.35 ஆயிரம் மாயமானது. அதனை மீட்க மீண்டும் முயற்சிக்கவே ரூ.3 லட்சத்திற்கு மேல் இழந்துள்ளார். இதனை அவரது மகன் வீடியோ மூலம் வெளியில் கொண்டு வந்துள்ளார்.

Similar News

News January 29, 2026

இன்று மட்டும் ஒரு கிராம் தங்கம் ₹1,190 உயர்வு.. அதிர்ச்சி

image

தங்கம் விலை இன்று (ஜன.29) ஒரே நாளில் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. இதனால் சவரனுக்கு ₹9,520 அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இன்று வாங்க திட்டமிட்டுள்ளோர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். காரணம், இன்றைய விலைக்கே ஆர்டர் செய்த நகையை வாங்க வேண்டும் என்பது தான். இந்த விலையேற்றம், வரும் நாள்களில் குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

News January 29, 2026

ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

image

2017-ம் ஆண்டு அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் 57 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போதைய முதல்வர் EPS, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்திருந்தாலும், CBCID பதிவு செய்த வழக்குகள் மட்டும் ரத்தாகாமல் இருந்தது. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இருந்து 57 பேரையும் விடுவித்து மதுரை HC உத்தரவிட்டுள்ளது.

News January 29, 2026

‘கருத்துப் பெட்டி’ மக்களை நாடும் தவெக

image

தவெக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், இக்குழுவானது TN முழுவதும் பிப்.1 முதல் பிப்.11 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதில், கருத்துப் பெட்டி வைத்து பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்படும் என்றும், அதன் அடிப்படையில் TN-ஐ வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!