News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

நாமக்கல்: மோகனூரில் அமைந்துள்ள அசலதீபேஸ்வரர் திருக்கோயில் நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
Similar News
News November 9, 2025
காவலர் தேர்வு எழுதுபவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு நவம்பர் 9 காலை நடைபெறுகிறது. இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. காவலர் தேர்வு எழுதும் அனைவருக்கும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உங்கள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுங்கள் உங்கள் ஒவ்வொரு இலக்கையும் நீங்கள் நிச்சயமாக அடைவீர்கள் என தெரிவித்துள்ளார்
News November 8, 2025
நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (08.11.2025) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இரவு ரோந்து அதிகாரியாகத் திரு. சக்திவேல் (காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை) நியமிக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் அவசர உதவிக்கு 100 அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறை எண்ணான 94981 81216-ஐத் தொடர்பு கொள்ளலாம்.
News November 8, 2025
நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் இன்று நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.5.65 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முட்டையின் விலை ரூ.5.60 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை தேவை அதிகரித்ததன் காரணமாகவே விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.


