News April 26, 2025
திருப்பாம்புரம்: ராகு – கேது தோஷம் நீக்கும் தலம்

திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள பாம்பு நாதர் கோயில், ஒரு மிகச் சிறந்த ராகு – கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு – கேது பகவான் இடப்பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு நடக்கிறது. இத்தலத்தில் வழிபட்டால் ராகு – கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
Similar News
News August 16, 2025
திருவாரூர்: விடுப்பு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தின தேசிய பண்டிகை விடுமுறை நாளான நேற்று (ஆக.15) திருவாரூர் மாவட்டத்தில், 34 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்; 32 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 66 நிறுவனங்கள் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணியில் அமர்த்தியது கண்டறியப்பட்டு, அந்த 66 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளதாக, உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் (15.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ அழைக்கவும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News August 15, 2025
திருவாரூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரித்துவாரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாளேஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான பாதாளேஸ்வரர் சுவாமிக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!