News April 26, 2025
எல்லையில் துப்பாக்கி சூடு… அதிகரித்த பதற்றம்

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 4, 2025
Cinema Roundup: இன்று ‘பராசக்தி’ பாடல் புரமோ ரிலீஸ்

*’பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் புரமோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. *ராம் சரணின் ‘PEDDI’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் Chikiri Chikiri என்ற பாடலை உருவாக்கியுள்ளார். *’பாகுபலி தி எபிக்’ 3 நாள்களில் 38.9 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *’ஜெயிலர் 2′ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவு. *ஆலியா பட் நடிக்கும் ‘ஆல்ஃபா’ ரிலீஸ் ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.
News November 4, 2025
பணவரவை அதிகரிக்கும் ஏலக்காய் பரிகாரம்!

பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி, தீபம் ஏற்றி வைத்து நெய்வேத்தியம் படைக்க வேண்டும். வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து, ஒரே ஒரு ஏலக்காயை வலது கையில் வைத்து, முழு மனதுடன் ‘ஓம் நமோ நாராயணாய கோவிந்தாய மாதவாய விஷ்ணவே நமஹ’ என கூறி வழிபட வேண்டும். பிறகு, கையில் இருக்கும் ஏலக்காயை பணம் வைக்கும் இடத்தில், வைக்க வேண்டும். SHARE IT.
News November 4, 2025
தமிழகத்தில் SIR பணிகள் இன்று தொடக்கம்

TN-ல் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று முதல் டிச.4-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெற உள்ளது. SIR கணக்கீட்டுப் படிவத்தை மக்கள் பூர்த்தி செய்து அளிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளுடன் இணைந்து அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று இப்பணியை மேற்கொள்ள உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ல் வெளியாகும்.


