News April 26, 2025

எல்லையில் துப்பாக்கி சூடு… அதிகரித்த பதற்றம்

image

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு எல்லை கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டை தொடங்கியுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 26, 2025

மிகப்பெரிய என்கவுன்டர்.. 37 பேர் பலி?

image

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கர்ரேகுட்டாவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 37 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News April 26, 2025

கோடீஸ்வர யோகம்: பணம் கொட்டப் போகும் 3 ராசிகள்

image

வரும் மே 31 முதல் ஜூன் 29 வரை சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். இதனால் 3 ராசிகள் அதிக நன்மைகள் பெறுவர்: *சிம்மம்- தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம், கோடீஸ்வர யோகம், குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி *துலாம்: அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு, தொழில் முயற்சி கைகூடும், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகும், உடல் ஆரோக்கியம் மேம்படும் *மேஷம்: பண யோகம் வரும், கோடீஸ்வர அதிர்ஷ்டம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

News April 26, 2025

ஆனந்த் அம்பானிக்கு புதிய பொறுப்பு

image

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலோடு, அவர் முழுநேர இயக்குநராக பணிபுரிவார் என்று ரிலையன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இவர் 2023-ஆம் ஆண்டு Non-Executive இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனந்த் அம்பானி அமெரிக்காவின் பிரவுன்ஸ் பல்கலையில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!