News April 26, 2025

நாகை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே.1ஆம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக், மதுபானக்கூடங்கள், உரிமம் பெற்ற மதுப்பானக்கூடங்கள், அரசு உரிமம் பெற்ற பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். மே.1 அன்று யாரும் மது விற்பனை செய்யக்கூடாது, அதையும் மீறி மது விற்பனை செய்யப்பட்டால் மது விற்பனை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News July 9, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, <>http://www.tnesevai.tn.gov.in <<>> என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் அளித்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News July 9, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

image

நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 2025 – 26ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை பெற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், <>http://www.tnesevai.tn.gov.in <<>> என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பத்தினை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் ஜூலை 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

நாகை: வங்கியில் வேலை! மாதம் ரூ.85,000 சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் தஞ்சை, கடலூர் உட்டபட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். இதற்கு <>இங்கே <<>>கிளிக் விண்ணப்பிக்கவும். மேலும் கடைசி நாள் ஜூலை 24ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!