News April 26, 2025

லஞ்சப் புகாரில் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்

image

விருத்தாச்சலம் பகுதியில் அண்மையில் போக்சோ வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை போலீசார் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட 3 பேரிடமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி இருவரும் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Similar News

News July 9, 2025

கடலூர்: ரயில்வே கேட் கீப்பருக்கு சிறை

image

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் நேற்று (ஜூலை 08) காலை தண்டவாளத்தை கடந்த பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரயில் மோதி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை நேற்று கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News July 9, 2025

கடலூர்: விபத்தில் பறிபோன 3 உயிர்கள்

image

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் நேற்று (ஜூலை 8) செவ்வாய்க்கிழமை நான் எங்க போட்டோ காலை பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மாணவி சாருமதி, மாணவர்கள் செழியன் (15) மற்றும் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்தவர்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 8, 2025

கடலூர் விபத்து: இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

image

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ரயில் விபத்தில் உயிரிழந்த சுப்ரமணியபுரம் பகுதியைச் சார்ந்த திராவிடமணி என்பவரது மகள் சாருமதி மற்றும் அவரது மகன் செழியன் ஆகியோரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்.

error: Content is protected !!