News April 4, 2024
300 சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இதுவரை 300 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. குஜராத்-பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வரும் இன்றைய போட்டியில், பஞ்சாப் வீரர் ப்ரார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கில் சிக்ஸர் விளாசினர். அதன் மூலம், இந்தத் தொடரில் இதுவரை 300 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. அதிகபட்சமாக KKR அணி 3 போட்டிகளில் 45 சிக்ஸர்கள், ஹைதராபாத் அணி 3 போட்டிகளில் 39 சிக்ஸர்களை விளாசியுள்ளது.
Similar News
News January 14, 2026
சற்றுமுன்: 38 பேர் பலி.. பெரும் துயரம்

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாலியில் உள்ள நைஜர் நதி நகரத்தில் இருந்து, இரவு நெல் அறுவடை செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏற்றிக் கொண்டு சென்ற படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.
News January 14, 2026
வடநாட்டு பெண்கள் குறித்து தயாநிதி சர்ச்சை பேச்சு

தமிழகத்தில் பெண்களை படிக்கச் சொல்லும்போது, வட இந்தியாவில் பெண்களை வீட்டு அடுப்படியில் இருங்கள், குழந்தை பெற்றுக்கொடுங்கள் எனக் கூறுவதாக கல்லூரி விழாவில் தயாநிதி மாறன் பேசியிருந்தார். இது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்து BJP தலைவர் அனிலா சிங், அறிவு இல்லாமல் மாறன் மீண்டும் வட இந்திய பெண்களை அவமதித்துள்ளார். DMK-ல் இது வழக்கமானது என்றாலும், இதுபோன்று பேச எப்படி அனுமதிக்கப்படுகிறது என சாடியுள்ளார்.
News January 14, 2026
விடுமுறை காலத்திலும் ₹10,000: அன்பில் மகேஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே ₹2,500 உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் <<18854282>>அன்பில் மகேஸ்<<>> தெரிவித்துள்ளார். மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான ‘முழுநேர ஊழியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், மே மாதம் விடுமுறை காலத்தில் ஊதியமாக ₹10,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


