News April 25, 2025

ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

image

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News November 7, 2025

SIR-க்கு எதிரான திமுகவின் வழக்கு நவ.11-ல் விசாரணை

image

SIR பணிகள் கடந்த 4-ம் தேதி தமிழகத்தில் தொடங்கி, நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி, வழக்குத்தொடர தீர்மானம் இயற்றப்பட்டது. இதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வரும் 11-ம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

News November 7, 2025

விஜய் நடத்தியது பித்தலாட்டம்: வைகோ

image

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை, சென்னைக்கு அழைத்து வந்து விஜய் ஆறுதல் கூறியது பித்தலாட்டம் என்று வைகோ விமர்சித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விஜய் ஏன் திருச்சியில் தங்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வைகோ, உயிரிழப்பு செய்தி அறிந்ததும் சென்னை ஓடிச்சென்று விட்டதாக விமர்சித்துள்ளார். யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என CM பேசிய பின்பும், சகட்டு மேனிக்கு பேசியுள்ளதாக சாடியுள்ளார்.

News November 7, 2025

ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம்.. கனமழை ALERT

image

வங்கக்கடலில் நவ.14 மற்றும் நவ.19-ல் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரும் நாள்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று(நவ.7) ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல், திருச்சி, மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் என IMD தெரிவித்துள்ளது.

error: Content is protected !!