News April 25, 2025
காஷ்மீர் மீது பழி போடாதீர்: குமுறும் பெண்

பஹல்காம் தாக்குதலில் பலியான குஜராத்தைச் சேர்ந்த ஷைலேஷின் மனைவி ஷீதல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. காஷ்மீர் மீது எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லும் அவர், அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளில்தான் பிரச்னை உள்ளதாக கூறும் அவர், அரசியல்வாதிகள், VIP-களின் பாதுகாப்புக்கு தரும் முக்கியத்துவம், வரிகட்டும் பொதுமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிறார். உங்க கருத்து?
Similar News
News April 26, 2025
தவெக என்றாலே எல்லோருக்கும் பயம்: புஸ்ஸி ஆனந்த்

தவெக என்றாலே அனைத்து கட்சியினருக்கும் பயம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சூளுரைத்துள்ளார். வாக்குச்சாவடி முகவர் என்றால் சாதாரண ஆட்கள் அல்ல, கட்சி வெற்றிக்கு நீங்களே பொறுப்பு, 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என கருதி அடுத்த 10 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வீடுவீடாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News April 26, 2025
மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் காலமானார்

நாட்டின் மூத்த வரலாற்று ஆய்வாளர் MGS நாராயணன் (93) வயது மூப்பு காரணமாக காலமானார். கேரளாவை சேர்ந்த இவர், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில்(ICHR) அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். கேரள வரலாறு, தமிழக வரலாறு, பண்டைய இந்திய வரலாறு, வரலாறு வரைவியல் முறையியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான வரலாற்று ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
News April 26, 2025
CSK போட்டியை பார்க்க ரெடியா?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 30-ம் தேதி CSK, PBKS அணிகள் மோதவுள்ளன. அதற்கான டிக்கெட் விற்பனை, நாளை (27.04.2025) காலை 10.15 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டிக்கு அடியும் பிடியுமாக நடந்த டிக்கெட் விற்பனை, CSK-வின் தொடர் தோல்வியால் மந்தமடைந்துள்ளது. இதனால், நாளைய டிக்கெட் விற்பனையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.